Header Ads



முஸ்லிம் மையவாடியை மீட்டுத்தந்து, நீதியை பெற்றுத்தாருங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்

மாளி­கா­வத்தை முஸ்லிம்  மைய­வாடி காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விவ­கா­ரத்தில் தலை­யிட்டு நீதி பெற்­றுத்­த­ரு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்­ளது. 

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் இக்­கோ­ரிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்­ள­துடன் இது தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தற்கு விரைவில் சந்­திப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி தரு­மாறும் வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள 07.10.2016 ஆம் திக­தி­யிட்ட கடி­தத்­திலே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

முஸ்லிம் மைய­வாடிக் காணி ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோத கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விடயம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடிதம் ஒன்று அனுப்­பி­வைத்­துள்­ள­தா­கவும் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

குறிப்­பிட்ட இந்த மைய­வாடிக் காணி ஆக்­கி­ர­மிப்பு 2007 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. அன்று முதல் கொழும்பு மாந­கர அதி­கார சபை அதி­கா­ரிகள் மூலம் கட்­டட நிர்­மாணப் பணி­களை இரு தட­வைகள் எம்மால் நிறுத்த முடிந்­துள்­ளது.

அக்­கா­லங்­களில் மாந­கர சபை முதல்­வர்­க­ளாக பிர­சன்ன குண­வர்­த­னவும் முஸம்மிலும் இருந்­தார்கள். மாவட்ட நீதி­மன்­றிலும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றிலும் எம்மால் சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க முடிந்­தது.

தற்­போது மைய­வாடிக் காணி விவ­காரம் தொடர்பில் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளது.

இவ்­வா­றான எமது முயற்­சிகள் மூலம் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்ள மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடிக் காணியை எம்மால் திருப்பிப் பெற முடி­யாமற் போயுள்­ளது. இதற்­கான காரணம் காணியை ஆக்­கி­ர­மிப்பு செய்­துள்­ளவர் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் நண்பர் என்­ப­தாகும். 

இந்தக் குறிப்­பிட்ட கட்­ட­டத்தின் நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் 2013 இல் காலா­வ­தி­யா­னாலும் அது மீள புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 2014 ஆம் ஆண்டு வரை கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாமல் நிர்­மாண வேலைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கொழும்பு மாந­கர சபையும் மாளி­கா­வத்தை பொலிஸ் சுற்­றாடல் பிரிவும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்­துக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை. நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் உத்­த­ரவின் படியே இந்த நிர்­மாணம் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது எனக் கரு­து­கிறோம். 

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு நல்­லாட்சி அமைக்­கப்­பட்ட போது நாம் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். சட்­டமும் ஒழுங்கும் நிலை­நாட்­டப்­ப­டு­மென எதிர்­பார்த்தோம். உங்கள் நிர்­வா­கத்தின் கீழ் எமக்கு நியாயம் கிடைக்­கு­மென எண்­ணினோம். 

2016 ஆம் ஆண்டு மாந­க­ர­சபை முதல்­வ­ருடன் இந்தச் சட்ட விரோதக் கட்­டடம் தொடர்­பாக பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். இதன் பல­னாக மாந­க­ர­சபை முதல்வர் சட்­ட­வி­ரோத கட்­ட­டத்­துக்கு எதி­ராக வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்தார். வழக்கு விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­டது.

இரு தரப்பும் தங்கள் தரப்பு அறிக்­கை­களை சமர்ப்­பித்­தனர். வழக்கின் தீர்ப்பு 24.08.2016 இல் வழங்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது. என்­றாலும் அன்­றைய தினம் வழக்­கினை மாந­கர ஆணை­யாளர் வாபஸ் பெற்றுக் கொண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. 

இது தொடர்­பாக நாம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எழுத்து மூலம் அறி­வித்­தி­ருக்­கிறோம். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சரை நேரில் சந்­தித்து முறை­யிட்டோம்.

மாந­கர சபை தொடர்ந்த வழக்­கினை மாந­கர சபையே வாபஸ் பெற்று கொண்­டமை தொடர்பில் வினவினோம். மாநகர சபை ஆணையாளர் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

பின்பு நாம் முதலமைச்சரைச் சந்தித்தோம். தான் மாளிகாவத்தை மையவாடிக் காணி தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்படவில்லை. என்று கூறியதுடன் இது தொடர்பாக விசாரணையொன்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.