Header Ads



கொள்ளை பணத்தில் ஆடம்பர திருமணம் - பிரித்தானியாவில் தமிழர் கைது

பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் முன்னணி பத்திரிக்கைகளான The Sun மற்றும் Daily Mail-ல் வெளியான தகவல்கள் பின்வருமாறு,

இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா (25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட் (28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று வந்துள்ளார்.

டெஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த நேரத்தில் கூடுதலாக மற்றொரு தொழிற்சாலையிலும் தவராஜா பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடராஜா நந்தகுமார் மற்றும் ஜகாமித்ரா விஸ்வநாதன் என்ற இரு நண்பர்களுடன் இணைந்து தவராஜா ஒரு அதிரடி திருட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெரா ஆகிய இரண்டு கருவிகளை எடுத்துக்கொண்ட மூவரும் Sutton பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் அவற்றை பொருத்தியுள்ளனர்.

இந்த ஜாமர் கருவி பொருத்தப்பட்டால், ஏ.டி.எம் மையத்தில் நுழைக்கப்பட்ட அட்டை இயந்திரத்திலேயே நின்று விடும். உரிமையாளருக்கு திரும்ப கிடைக்காது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா அட்டை உரிமையாளர் அழுத்திய ரகசிய எண்களை பதிவு
செய்துக்கொள்ளும் அட்டை திரும்ப கிடைக்காமல் அவர்கள் அங்கிருந்து திரும்பியதும், அந்த அட்டை மற்றும் ரகசிய எண்களை பயன்படுத்தி தவராஜா ஏ.டி.எம் மையங்களில் பணம் திருடி வந்துள்ளார்.

அதே நவம்பர் மாதம் ஏ.டி.எம் மையத்தில் இரண்டு பெண்களின் அட்டைகள் உள்ளேயே சிக்கியுள்ளது. பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் அட்டையில் இருந்து 4,400 பவுண்ட் பணம் எடுக்கப்பட்டது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை உடனடியாக இருவரும் பொலிசாரிடம் புகார் அளிக்க மூவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த யூலை மாதம் தன்னை விட 3 வயது மூத்தவரான கிருத்திகா ஸ்கந்ததேவா என்ற பெண்ணை தவராஜா வெகு ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.

லண்டன் நகரில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ஒன்றான Grosvenor House என்ற ஹொட்டலில் தவராஜாவின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
திருமணத்தில் கலந்துக்கொண்ட சுமார் 400 விருந்தினர்களை தவராஜா ஸ்பெஷலாக கவனித்து அசத்தியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு 16,000 பவுண்ட் மட்டுமே வருமானம் பெற்ற தவராஜா இந்த திருமணத்திற்கு மட்டும் 1,00,000 பவுண்ட்(1,79,26,835 இலங்கை ரூபாய்) செலவு செய்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த திருமண விவகாரம் வெளியே கசிந்த பிறகு சந்தேகம் ஏற்பட்ட பொலிசார் தவராஜாவை விசாரணை செய்ததில் அவர் அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.

பின்னர், மற்ற இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், சிறையில் நன்னடத்தை காரணமாக தவராஜா 3 அல்லது 4 மாதங்களில் கூட விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


9 comments:

  1. பிரிட்டனில் வாழும் அகதித் தமிழனின் பிறவிக் குணம்.

    இதில் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete
  2. Ha ha same like there srilankan counter part..they all same...never change better distroy these cobras.

    ReplyDelete
  3. இந்தப் பொறுக்கி, நல்ல சுத்து மாத்து செய்து, ஒரு தமிழ் வர்த்தகரின் மகளைத் திருமணம் செய்திருக்குது.

    இந்த தமிழ் வர்த்தகரும் ஒரு 'புலம் பெயர் வியாபாரியாம்.

    புலம் பெயர் வியாபாரி என்றால் யார்?

    இலங்கைத் தமிழ் மக்களின் பேரால், புலம் பெயர் மக்களை உசுப்பேற்றி, சூடாக்கி பணம் வசூலாக்குவதுதான் தொழில். அதாவது, நக்கிப் பிழைக்கும் தொழில். இந்த வர்த்தகரின் சைட் பிசினஸில் இதுவும் ஒன்று.


    அதாவது, இப்போது மாவீரர் துயிலும் இல்லம் என்ற விலையுயர்ந்த தமிழர்கள் சுற்றுலா மையம் ஒன்றை அமைத்துவரும் குழுவின் இணைப்பாளர் - இந்த வர்த்தகர்.

    இந்த வர்த்தகரின் ஜாடிக்கு மூடிபோல், கிடைத்திருக்கிறது - அவரின் ATM சுரண்டல் பேர்வழி மருமகன்.



    ReplyDelete
  4. எல்லா இனத்திலும் சமூக விரோதிகள் உள்ளனர். ஆனால் @LTTE RACIST உங்கள் ஆட்கள் போல போதை பொருள் வியாபாரம் , வேலை கொடுத்த முதலாளியையே கடத்தி சென்று கப்பம் கேட்டு கொலை செய்வது போன்று இழி குணங்களை உடைய ஒரு இனம் உலகத்தில் இல்லை .

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி

      Delete
    2. @ Kumar உண்மையாகவா? பாவம் ஒரு சம்பவத்தை வைத்து கதைபாடுகிறீர்.
      மேலே குறிப்பிட்டவன் தனக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டிடனருக்கே்துரோகம் செய்துள்ளான்.

      Delete
    3. முஸ்லீம்கள் தமக்கு அடைக்கலம்கொடுத்த நாடுகளில் குண்டு வைக்கிறார்களே.ஹீ,ஹீ

      Delete
    4. முஸ்லீம்கள் ஜனநயககம் பற்றியோ,பயங்கரவாதம் பற்றியோ தீவிரவாதம் பற்றியோ பேசுவது சாத்தான் வேதம்ஓதுவது போன்றது.

      Delete
  5. @VoiceSriLankaகொஞ்சமாவது மனச்சாட்சியுடன் பேசுங்கள் . அடைக்கலம் கொடுத்த நாட்டில் அவர்கள் செலவிலேயே வளர்ந்து படித்து முடித்தபின் குண்டு வைத்து அழிப்பது யார் ? புலம் பெயந்த தமிழர்களில் ஓரிருவர் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடுவதுண்டு .ஆனால் பொதுவாக தமிழர்கள் இவ்வாறானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.