Header Ads



பாகிஸ்தான் நாட்டிற்கு, பிரதமர் ஆவதுதான் எனது லட்சியம் - மலாலா

பாகிஸ்தான் நாட்டிற்கு பிரதமராக பதவியேற்று பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது தான் தனது லட்சியம் என மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் பெற்றார்.

2012ம் ஆண்டு சிறுமிகளின் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக அவரை சுட்டதை தொடர்ந்து உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மலாலா பங்கேற்றுள்ளார்

அப்போது, ‘பாகிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் ஆவது தான் எனது லட்சியம்.

பெனாசிர் பூட்டோ எப்படி இரண்டு முறை பிரதமர் பதவி வகித்து பெண்களுக்கு நன்மை செய்தாரோ, அவரை போன்று நானும் சிறுமிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன்.

3 comments:

  1. ஏன் பிரதமராகமல் மக்களுக்கும் பெண்களுக்கும் சேவை செய்யமுடியாதா எத்தனையோ பெண்கள் மக்களுக்கு பலவழிகளிலும் சேவை செய்தார்கள் அவர்கள் அனைவரும் எங்கும் பிரதமராக இருக்கவில்லை அன்னை தெரேசா மக்களுக்கு பெரும் சேவை செய்தார்கள் அவர்கள் உங்களை போன்று ஆகய கோட்டை கட்டவில்லை நீங்கள் தற்போதே மேற்கத்தியர்களின் கைகூழியாக உளாவி வருகின்றீர் பிற்காலத்தில் எவ்வாறு உங்களை பாகிஸ்தான் மக்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்?

    ReplyDelete
  2. இலட்சியம் நிறைவேறவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Brother Riyal Abdullah! Update your evidence, according your comments. Thanks

    ReplyDelete

Powered by Blogger.