Header Ads



கோத்தபாய - மைத்திரி உறவு ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தபாய இந்த தகவலை வெளியிட்டார்.

நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கோத்தபாய கருத்து வெளியிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி இந்த சம்பவம் தொடர்பில் உண்மையை உணர்ந்துக் கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், இதேபோன்று அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்டுவார் என நான் நினைக்கின்றேன்.

எப்படியிருப்பினும் தங்களுக்கு பாரிய ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளைமையினால் நாட்டில் உள்ள சட்டத்திற்கமைய அதனை விசாரிப்பது பிழையா என கேள்வி எழுப்பப்பட்ட போது,

நான் எந்தவொரு விசாரணைகளையும், நான் புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

தற்போது ஜனாதிபதி அதே முறையில் சுட்டிக்காட்டியுள்ளார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.