Header Ads



இலங்கையில் சிறுநீரக கோளாறை ஏற்படுத்திய நெதர்லாந்து - சாட்சிசொல்ல நிபுணர்கள் குழு அங்கு விரைவு

நெதர்லாந்து நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சாட்சி வழங்க இலங்கையின் நிபுணர்கள் குழு ஒன்று அங்கு பயணிக்கவுள்ளது.

சிறுநீரக கோளாரை ஏற்படுத்தும் வகையிலான இரசாயன உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு எதிராக, அந்த நாட்டின் ஜூரி சபையிலே சாட்சி வழங்கவுள்ளது.

மேலும் 15 நாடுகள் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சாட்சி வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரசாயன பசளைகள் காரணமாக சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமையை அடுத்தே சாட்சி வழங்க தீர்மானித்துள்ளது.

இன்று (12) முதல் 19ஆம் திகதி வரையில் நெதர்லாந்தில் இந்த அறங்கூறுனர் சபை செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.