Header Ads



“மஹிந்த ராஜபக்ஷ, நாக்கை மறைத்து பேசவேண்டியதில்லை”


கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஏன் தோல்வி அடைந்தோம் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் தற்போது நாக்கை மறைத்து பேச வேண்டிய அவசியம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டிருக்காது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

சுதந்திரக் கட்சியை பிளவடையவிடமாட்டேன் என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷ மறுபுறம் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கும் இனவாத சக்திகளுடன் செயற்படுவது ஏன் என்றும் டிலான் பெரேரா கேள்வி எழுப்பினார். 

அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் மக்களின் கருத்து என்னவென்பதை கண்டறிய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.