Header Ads



ஹெட்செட் பாவிப்பவர்களின் கவனத்திற்கு..!

பொதுவாக நம்மில் அதிகமானோர் பயன்படுத்தி வருவது ஹெட்செட். நாம் அனைவரும் அதன் மூலம் பாடல்கள் கேட்கிறோம், படங்கள் பார்க்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் பெரிதாக சிந்திப்பதில்லை.

பயணத்தின் போதோ, நடந்து செல்லும் போது, அது ஏன் தூங்குவதற்கு முன்னர் கூட பலர் ஹெட்செட்டில் பாடல் கேட்டு வரும் பழக்கம் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம் கேட்டால், ஹெட்செட் இல்லாமல் பாடல்களோ அல்லது படங்களோ பார்த்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறிவிடும், அதன் காரணமாகவே ஹெட்செட் பயன்படுத்தவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

ஹெட்செட்டில் பாடல்கள் கேட்பது என்பது ஒரு பொழுது போக்கு என்பது மாறி, தற்போது அது ஒரு Style ஆக மாறியுள்ளது. ஆனால் அதில் இருக்கு பாதிப்புகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை, அது தெரிந்தால் ஹெட்செட் உபயோகிப்பதை சற்று யோசிப்பீர்கள்.

தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்திவந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காது கேட்காத நிலை கூட ஏற்படும்.

பொதுவாக 80-85 வரையிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும்போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.எனவே ஹெட்செட்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

அடுத்தது ஹெட்செட்களை சுத்தமாக வைத்துகொள்வது. நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம். அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம்.

அதேபோல் அடுத்தவர்களின் ஹெட்செட்களை நாமும் பயன்படுத்த கூடாது, நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு தரவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவருக்கும் தொற்றிக்கொள்ளும்.

ஹெட்செட்களில் இருந்து உற்பத்தியாகும் மின்காந்த அலைகள் தமது மூளையை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஹெட்செட்களை பயன்படுத்திகொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே வாகனம் ஓட்டும் போதோ சாலையில் நடந்துசெல்லும் போதோ ஹெட்செட்டை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடவேண்டும்.

முடிந்தளவு ஹெட்செட்டில் பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு இயற்கையின் ஓசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு இனிமை ஏற்படக்கூடும்.

No comments

Powered by Blogger.