Header Ads



மாதம்பை முஸ்லிம்களுக்கு பேரிடி - நீதியை பெற்றுத்தரும்படி, முஸ்லிம் அமைச்சர்களிடம் வேண்டுகோள்

மாதம்­பை­யில் புனித பூமிக்குச் சொந்­த­மா­னது என அர­சாங்க வர்த்­த­மானி மூலம் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் காணி­களை மாதம்பை பிர­தேச செய­லாளர் நில அள­வீடு செய்­வ­தற்கு மேற்­கொண்­டி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு காணி உரி­மை­யா­ளர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

சட்­ட­ரீ­தி­யான காணி உறு­திகள் தம்­மிடம் இருப்­ப­தா­கவும் அர­சாங்கம் காணி­களை நில அளவை செய்து சுவீ­க­ரிக்கும் பணியை ஆரம்­பிக்க திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­வ­தா­கவும் தங்­க­ளது பூர்­வீக காணி­களை விட்டு ஒரு போதும் அகலப் போவ­தில்லை எனவும் அவர்கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் கூறி­யுள்­ளனர்.

பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க காணி உறு­திகள் சட்ட ரீதி­யா­ன­வை­க­ளாயின் சுவீ­க­ரிக்­கப்­பட முடி­யாது என்று தெரி­வித்து அக்­காணி உறு­தி­களை மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் ஆவ­ணங்­க­ளுடன் கைய­ளிக்­கு­மாறு காணிச் சொந்­தக்­கா­ரர்­களை வேண்­டி­யி­ருந்தார்.

காணி உறு­தி­களை பரி­சீ­லனை செய்து அது தொடர்­பான அறிக்­கை­யொன்­றினை தனக்குச் சமர்ப்­பிக்­கு­மாறு பிர­தேச செய­லா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார். நேற்று முன்­தினம் பிர­தேச செய­லா­ள­ரிடம் 25 காணி உறு­தி­களும் ஆவ­ணங்­களும் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது அவற்றை பிர­தேச செய­லாளர் ஏற்க மறுத்­து­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்­பிட்ட காணி உறு­தி­களும், ஆவ­ணங்­களும் சட்­ட­ரீ­தி­யா­னவை என்றும் அவற்றை ஏற்­பதில் பிர­யோ­ச­ன­மில்லை எனவும் தெரி­வித்து அவர் காணி­களை நில அள­வீடு செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார். புனித பூமியின் எல்­லை­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு நில அள­வீடு செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என்­ப­தற்கு மாதம்பை பிர­தேச செய­லாளர் எச்.எம்.எஸ்.ரி.ஹேரத் எந்­த­வித உத்­த­ர­வா­தமும் வழங்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து அமைச்சர் சம்­பிக்­கவின் உத்­த­ர­வுக்­க­மைய காணி உறு­தி­களை பரி­சீ­லனை செய்­வ­தற்கு பிர­தேச செய­லாளர் மறுப்புத் தெரி­வித்­த­தனால் இது பற்றி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­விடம் முறைப்­பாடு செய்­வ­தற்கு பாதிக்­கப்­பட்­டுள்ள காணி உரி­மை­யா­ளர்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றார்கள்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெளிவுபடுத்த பாதிக்கப்பட்டோர் தீர்மானித்திருக்கிறார்கள்.

இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நீதி பெற்றுத்தரவேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அனீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடிவெள்ளி -  ARA.Fareel

No comments

Powered by Blogger.