Header Ads



கட்டுவன்வில் தைக்கியா பள்ளிவாயல், ஜும்ஆ பள்ளியாக பிரகடனம்

-M,JAWFER,JP-

௧டந்த 1983ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் கட்டுவன்வில் வடக்கு தைக்கியா பள்ளிவாயல் இத்தனை வருடங்களாக முயற்சி எடுக்கப்பட்டு 14.10.2016 வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ பள்ளியாக பிரகடனப்படுத்தப்பட்டு அன்றைய தினம் முதன்முதலில் ஜும்ஆ பிரசங்கம் நடைபெற்றது.

ஊர் ஜமாஅத்தார்கள் அனைவரும் சந்தோஷமாக ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர். இந்த பள்ளியை ஜும்ஆ பள்ளியாக மாற்றுவதற்கு இப்பள்ளியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற மர்ஹும் கலந்தர் லெப்பை எடுத்த விடா முயற்சியும்  இப்போதுள்ள நிருவாகிகளின் விடா முயற்சியும் பயனளித்துள்ளது.

அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை நல்லதாக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.


No comments

Powered by Blogger.