Header Ads



யாழ்.குடாநாட்டில் பொலிஸார் தயார் நிலையில்

யாழ்.குடாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து யாழ்.நகர பகுதிகளில் பொலிஸாரின்நடமாட்டம் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்.குளப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் யாழ்.பொலிஸ் நிலையம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையம் போன்றவற்றில் இருந்தபொலிஸார் முழுமையாக பொலிஸ் நிலையத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இதனால்பிரதான வீதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளைமேற்கொள்வதற்கும் கூட பொலிஸார் கடமையில் இல்லை.

இதேபோல் இன்றைய தினம் சில பாட சாலைகள் இயங்கிய போதும் அங்கும் பொலிஸார் எவரும் இல்லை.

இதேவேளை போக்குவரத்துபொலிஸார் உட்பட சகலரும் ஆயுதங்களுட ன் பொலிஸ் நிலைய பாதுகாப்பு பணிகளுக்காகஈடுபடுத்தப்பட்டுள்ளமையினை காணமுடிகிறது.

மேலு ம் வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பொலிஸார் தயார் நிலையில் உள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.