Header Ads



'காத்தான்குடி காயப்பட்ட போதெல்லாம், ஓயாமல் உழைத்தது'

-Mohamed Nizous-

அந்த
நூர்
நூர்ந்து போனதைப் பர்த்து
நொந்து அழுகிறது மனசு.
ஏனோ தெரியவில்லை.
சஹாபாக்கள் பற்றி
சரித்திரம் படிக்கும்
சந்தர்ப்பங்களிலெல்லாம்
அந்த புனிதர்களாய்
இந்த முகமே
என் மனதின்
இமேஜ் கலறியில் வரும்.
காத்தான் குடி
அதிகார வெறியர்களால்
அதிர்ந்த போதெல்லாம்
இந்த
அதிராம் பட்டணம்தான்
எதிராக நின்று
உதிரம் சிந்த 
உழைத்தது.
துப்பாக்கி சீறிய
சிப்பாய்கள் கூட்டம்
தங்களின்
ஜுப்பாவை கண்டவுடன்
அப்பாவிப் பிள்ளையாய்
அடங்கிய வரலாறு
அடி மனசில் இன்னும் இருக்கு.
நீங்கள்
நடந்து போகையில்
கடந்து போக மனமின்றி
கனக்கப் பேர் காத்திருப்பார்
உங்கள் முன்னால்
ஊரில் எவரும்
உரத்துப் பேசமாட்டார்.
நீங்கள்
நீரூற்றிய
பலாஹ்
பலாவாகி
பலகாலமாய்
படர்ந்து நிற்கிறது.
அதில்
பழகிய
பலாஹி-பாலாகி
பரந்து ஓடுகிறது.
எல்லா நன்மைகளுக்கும்
இரு உலக வாழ்விலும்
இறைவன்
ஏற்றத்தை தருவானாக.

4 comments:

  1. இவா காயல்பட்டணம் அல்ல தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணமாகும்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் உண்மையிலை மனம் தழருகிறது கண்கள் குளமாகிறது,அல்லாஹும்மஹ்பிர்லஹு வர்ஹம்ஹு

    ReplyDelete
  4. Innalillahiwainnailaihirojiun. Allah Yarham

    ReplyDelete

Powered by Blogger.