Header Ads



லசந்தவின் கொலை, நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டவை..!

துப்­பாக்கி தொடர்­பி­லான மிக முக்­கிய சிக்­க­லொன்­றுக்குள் தான் சிக்­கிக்­கொண்­டுள்­ள­தாக முன்னாள் சண்டே லீடர் பத்­தி­ரிகை ஆசி­­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கூறி தற்­கொலை செய்­து­கொண்ட இரா­ணுவ புல­னாய்வு வீரர் ஜய­மான்ன தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ள­தாக புல­னாய்வு  பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கிரி­ஷாந்த சில்வா கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹமட் சஹாப்­தீ­னுக்கு நேற்று -28- அறி­வித்தார். 

லசந்த விக்­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட பிர­தான காரணம் மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பி­லான மோச­டி­களே அம்­ப­லப்­ப­டுத்­தி­ய­மை­யே­யாகும் என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் அவர் நீதி­வா­னுக்கு அறி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­ததா­வது,

லசந்த விக்­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கூறி தற்­கொலை செய்­து­கொண்ட ஓய்வு பெற்ற இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரி­யான ஜய­மான்ன  தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தோம்.  அவர் தற்­கொலை செய்­து­கொள்ள முன்னர் அதா­வது கடந்த 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறிச் சென்று வெளியே தங்­கி­யி­ருந்­துள்ளார்.

 குறிப்­பாக கடந்த 12 ஆம் திகதி கட்­டு­கு­றுந்த இரா­ணுவ முகா­முக்கு அவர் சென்­றுள்ளார். முகா­மி­லி­ருந்து திரும்­பிய அவர் தனக்கு மிக நெருக்­க­மான சில­ரிடம் தான் முகா­முக்கு சென்ற  விட­யத்­தையும் அங்கு துப்­பாக்கி ஒன்று தொடர்­பி­லான பிரச்­சினை ஒன்­றுக்குள் தான் வச­மாக சிக்­கிக்­கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார். 

இவரால் எழு­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் கடிதத்தின் கையெ­ழுத்து அவ­ரு­டை­யதே என அவ­ரது மகள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. கடிதத்தில் பெயர் குறிப்­பி­டப்­ப­ட்­டுள்ள இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்­டுள்ள பிரே­மா­நந்த உட­லா­க­மவை விடு­விக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. 

இதில் பிரே­மா­நந்த உடலா­க­மவின் பெய­ரா­னது மிலிந்த உட­லா­கம என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இரா­ணுவ புல­னாய்வு பிரிவில் பிர­மே­னாந்த உட­லா­க­ம­விற்கு மிலிந்த உத­லா­கம என்றே பெயர் சூட்­டப்­பட்­டி­ருந்­ததாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்­நி­லையில் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் சார­தி­யான டயஸ் என்­ப­வரை தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர் பிரே­மா­நந்த உடலா­கம கடத்திச் சென்­றமை தடுத்து வைத்து அச்­சு­றுத்­தி­யமை ஆகி­யன உறு­தி­யா­கி­யுள்­ளன.

இதன்­போது மிக் விமான மோசடி தொடர்பில் எழு­தி­ய­தற்­காக லசந்­தவை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கொலை செய்­த­தாக லசந்­தவின் சாரதி டயஸ் என்­பவர் பல­ரிடம் கூறியமைக்காகவே கடத்தப்பட்டு விசாரணை என்ற பேரில் உயிர் அச்சு றுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனி னும் உண்மையிலேயே லசந்தவின் கொலையானது மிக் விமான கொள்வனவு மோசடியை மையப்படுத்தியமையினா லேயே   இடம் பெற்றுள்ளமை இதுவரை யிலான விசாரணைகளில் உறுதி செய்யப் பட்டுள்ளதாக  நிஷாந்த சில்வா மன்றுக்கு அறிவித்தார்.

No comments

Powered by Blogger.