Header Ads



இன்று இரவு எச்சரிக்கையுடன், இருக்குமாறு அறிவுறுத்தல்

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று இரவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும், அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தல் அதற்கு முகம்கொடுக்கும் நோக்கில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று பகல் சேவையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸாரும் இரவு நேர கடமையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொழும்பு அரசியலிலும் அண்மைய நாட்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.