Header Ads



உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா..?

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமார் தரும் தகவல்கள் 

வீடியோ கேம்ஸ்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடிப்பது, கீழே தள்ளுவது, சுடுவது போன்ற அடிப்படையிலே வடிவமைக்கபட்டு இருக்கிறன. இந்த மாதிரி விளையாட்டுகளை குழந்தைகள் தொடர்ந்து விளையாடும்போது, நிஜத்திலும் அதுதான் வெற்றி என்று மனநிலையில் மற்றவர்களை அடிப்பது போன்ற பண்புடைய மூர்க்கர்களாக வளர வாய்ப்பு உள்ளது.

கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் குழந்தைகள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இது மனதின் சமநிலையாக வைத்திருக்க முடியாமல் உங்கள் குழந்தைக்கு செய்துவிடும். பிரச்னை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்பட்டு விரைவாக செயல்படும் தன்மைக்கு மாற்றப்படும். இதனால் குழந்தைகள் நிஜவாழ்க்கையிலும் பிரச்னைகளைக் கையாளத் தெரியாதவர்களாக மாறிவிடுவர்.

வழக்கமான விளையாட்டுகள் இருவருக்கு மேல் ஆடுவதாக இருக்கும். இதனால் ஒற்றுமையுடன் சேர்ந்து விளையாடுவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற பண்புகள் வளரும். ஆனால் வீடியோ கேம்ஸ் விளையாடும் போது, குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிக்கொள்ள வேண்டும், அடுத்தவர்களைக் காயப்படுத்தியாவது வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி விடும். மேலும், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணமும் வளரக்கூடும்.

உடலைக் களைப்படையச் செய்யும் விளையாட்டுகளில், குழந்தைகளின் உடல் தசை வலுப்படும், ரத்தம் சுத்திகரிக்கப்படும். ஆனால் வீடியோ கேம் குழந்தையை ஒரே இடத்தில் உட்கார வைத்து, சோம்பல் தன்மையை அதிகரிக்கும்.

வீடியோ கேம்ஸ் அதிக நேரம் விளையாடும்போது, அந்த கேம்ஸில் வரும் காதாபாத்திரமாகவே குழந்தைகள் தங்களை மாறிவிடுகிறார்கள். இதனால் உங்கள் குழந்தை அவர்களின் தனித்துவத்தை இழந்து, தாங்கள் விளையாடும் விளையாட்டில் வரும் கதாபாத்திரங்கள் போன்று ஆடை அணிந்து கொள்வது அவர்களைப் போன்றே செயல்படுவது என்பதை என... தனக்கான ரசனை, விருப்பம் ஆகியவற்றைத் தொலைத்துவிடுகின்றனர்.

உடல் சார்ந்த விளையாடுக்கள் விளையாடும்போது உங்கள் குழந்தையை ஏதேனும் ஒரு வகையில் யோசிக்க வைத்து, கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்கும். ஆனால் எலக்ட்ரிக் கேம்ஸில் சிந்தனைக்கு இடமே இல்லாமல் மூளையை மழுங்கச் செய்துவிடும். இதனால் அவர்கள் புதிது புதிதாக யோசிக்கும் தன்மையை இழந்து விடுகின்றனர். மேலும். வேறு வேலைகள் செய்யும் போதும், படிக்கும்போதும்கூட அந்த விளையாட்டின் எண்ணங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏற்படும். இதனால் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் போய்விடுகின்றனர்.

விளையாடு என்பது உடலைக் களைப்படையச் செய்து, மனதை சிந்திக்கத் தூண்ட வேண்டும். அதை செய்யத் தடையாக இருக்கும் எந்த ஒன்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரானதே.

No comments

Powered by Blogger.