Header Ads



பொதுநிதிகளை கொள்ளையிடுவோருக்கு, ஒக்சிஜன் வழங்கும் செயற்பாடு - ரஞ்சன் ஆத்திரம்

இலங்கை அரசியலில் நேரடி விமர்சனங்களை மேற்கொண்டு வரும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

அரச நிதிகளை வீணாக செலவிட்டமை தொடர்பில் நிதிகுற்றங்களுக்கு எதிரான பொலிஸ் பிரிவு, அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவின் அமைச்சின் பணியாற்றும் சில பணியாளர்களுக்கு விசாரணைக்காக அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் அந்த விசாரணைகளுக்கு செல்லத்தேவையில்லை என்று அமைச்சர் திஸாநாயக்க பணியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது இலங்கையின் சட்டத்துக்கு எதிரான செயற்பாடு என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது பொதுநிதிகளை கொள்ளையிடுவோருக்கு ஒக்சிஜனை வழங்கும் செயற்பாடு என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.