அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்துகிறது..? ரீட்டா ஐசாக் கேள்வி
-விடிவெள்ளி ARA.Fareel-
அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்துகிறது? முஸ்லிம்களின் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலீம், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே சிறு பிரச்சினைகள் நிகழ்கின்றன.
அவற்றை அரசாங்கம் உடனுக்குடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கிறது. சிறுபான்மை இனத்தவர்கள்தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ரீட்டா ஐசாக் நதேயா அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அவர் இலங்கையில் சிறுபான்மை இனமான முஸ்லிம்களின் கல்வி, பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், பாடசாலைகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார். அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்துகிறது? முஸ்லிம்களின் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்றும் வினவினார். புதிய அரசியலமைப்பும் முஸ்லிம்களும் பற்றிய விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. அனைத்து மதங்களும் சமமாகக் கணிக்கப்படுகின்றன.
அனைத்து மதங்களின் அலுவல்களைக் கவனிப்பதற்காக ஒவ்வோர் மதத்துக்கும் தனியான அமைச்சு நிறுவப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை மக்கள் மீது மிகவும் கரிசனையுள்ளவர்களாக இருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான தனியான அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 20 வருட காலமாக முஸ்லிம்களின் அலுவல்களைக் கவனிப்பதற்கென தனியான அமைச்சொன்று இருக்கவில்லை.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கென்று தனியான அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் முஸ்லிம் விவகாரங்கள் ஒரு ஒழுங்கின் கீழ் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் முஸ்லிம்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். நாடெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்படும் குத்பா பிரசங்கங்களில் நல்லிணக்கம் வலியுறுத்தப்படுகின்றது. முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி பாடசாலைகளிலும் கல்வி பயில்கிறார்கள்.
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போன்று நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகள் உருவாகவில்லை. முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் தரப்பு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியவைகளை பரிந்துரை செய்திருக்கிறது. ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது.
எனது தனிப்பட்ட கருத்தொன்றையும் நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். எமது நாட்டில் 30 வருட காலமாக நீடித்த யுத்தத்தினால் இனங்களுக்கு இடையில் விரிசல்கள் ஏற்பட்டன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்பு சமாதான சூழ்நிலை உருவாகியது. அதன் பின்பு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டன என்றாலும் தற்போதைய அரசாங்கம் இனவாதத்தை முறியடிப்பதில் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது என்றார்.
இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவுடனான கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல், அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியல் பசப்புகள் கலந்த பதில்.முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பாக கிராமப்புற பாடசாலைகளில் முக்கியமான பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அது பற்றி கல்விக்காரியாலயங்கள் எந்தக் கரிசனையும் காட்டவில்லை.சோனக அரசியல்வாதிகள் அவர்களின் கமிசன் வாசிகளில் மூழ்கித்திளைக்கின்றனர்.எந்த ஒரு அரசியல்வாதியும் எமது சிறார்களின் கல்வி பற்றி எந்த அக்கறையும் இல்லை. கிழக்கு மாகாணம் இதற்கு ஓரளவு விதிவிலக்காக இருக்கலாம். ஏனைய பகுதிகளின் நிலை பெரும்பாடும் வீழ்ச்சியும் அவலமும்தான். முஸ்லிம் அமைச்சு அமைத்து இன்று 30 வருடங்களுக்கு மேல்.அது பற்றிக்கூட பொறுப்பானவர்களுக்கு விளங்குவதாத் தெரியவில்லை.
ReplyDeleteEnga wa thaduthu niruthina...eppa niruthina ...
ReplyDeleteஎமது அரசியல் பிரபுக்களுக்கு எம் சமூகம் பற்றிய எவ்வாறான சிந்தனையும் தூரநோக்கு என்பதை உள்ளது.என்பதைப்பாருங்கள் .பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றப்படட முஸலீம்களின் மீழ்குடியேற்றம் .நஷ்டஈடு,காணியற்றவர்களுக்கான அரசகாணி,வாழ்வாதார வசதியின்மை.எல்லை நிர்ணய முறைபில் பாகுபாடும் அநீதமும்.அரசியல்யாப்பு சீர்திருததம் என்ற பெயரில் வடக்கு.கிழக்கு மாகாணத்தை இணைக்க முற்படுபவை.தொகுதிவாரி தேர்தல்முறையில் முஸ்லீம்களின் பிரதிநிதுத்துவ இருப்பு பறிபோகும் நிலை.பொதுவாக கடும்போக்கு வாதிகளினால் முஸலீம்களுக்கு ஏற்பட்டுவரும் சேதங்களும் இழப்பீடுகளுக்கும் இன்னும் உண்மை நிலைகண்டறிப்படாமல்இரும்கும் நிலை சுதந்திரமாக எமது கலாசாரத்தையும் எமது மதஅனுஷ்டதானங்களை வேறகொள்ளுவதற்கான இடையூறுகளும் தடங்கள்களும் .வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லீமகள்எதிர்கொள்ளும் அரச நிர்வாகிகளினால் திட்டமிட்ட புறக்கணிப்புக்களும் சாட்டுப்போக்குகளும் இழுத்தடிப்புக்களும் நடைபெற்றுவருவது முஸலீம்கள் இன்று எதிர்கொள்ளும்பாரிய சவால்களும் பிரச்சினைகளுமாகும்
ReplyDelete