Header Ads



என்னை ராஜா என அழைத்த மக்கள், தற்போது ஓநாய் என்கின்றனர் - மஹிந்த வேதனை

“முன்னதாக மக்கள் என்னை பலமிக்க ராஜா எனவும் மந்திரி என்றும் அழைத்தனர் ஆனால் தற்போதோ ஓநாய் என அழைக்கின்றார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார்.

வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாங்கள் ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

Green பல்கலைக்கழகம் நிர்மாணிக்க தீர்மானித்திருந்தது எனது அரசாங்கம் தான் ஆனால், தற்போதைய அரசாங்கம் அது அவர்களுடைய யோசனை என தெரிவித்துக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டை நடத்தி வருகின்றது.

இந்த வகையில் அடுத்து கைது செய்யப்போவது யார் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே கைது செய்யப்பட உள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Whoever the writer/journalist, please DO NOT WRITE/PUBLISH DISTORTED STATEMENTS or NEWS. Mahinda DID NOT SAY that the people are now calling him an "FOX"/"MURUGAYA". Mahinda said "THEY" and he meant the politicians of the "YAHAPALANA" government. If more "CLARITY" is to be given to Mahinda's statement made at Weligama at a public meeting yesterday, then what Mahinda refered is that those politicians and government VVIP's and ministers who PRAISED HIM AS A KING during his regime/government are now calling him a "MURUGAYA"- https://youtu.be/iwFOZ1etlrA?t=25 .
    www.jaffnamuslims should riprimand this writer for violating the "Code of Ethics" of journalism and "Code of Conduct" for lournalists and demand this journalist/writer to withdraw that false statement and tender his apology to President Mahinda Rajapaksa in writing and publish that apology in the www.jaffnamuslim.com website/FORUM/webnewspaper.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. இனிமேல் யாரும் அப்படி சொல்லவேண்டாம்

    ReplyDelete
  3. அது மக்கள் சொல்லவில்லை ( ராஜா, ஓநாய் ), உனது மனசாட்சி சொல்கிறது.

    ReplyDelete
  4. முன்னொரு காலம் நீங்கள் அல்ல நாங்கள், உங்களை மட்டுமல்ல, உங்கள் பரம்பரையையையே ராஜாக்களாகவே எதிர்பார்த்தோம். ஆனால் அழுத்கமைக்கு அப்புறம் நீங்களே உங்களை சிங்ஹராஜாவாக சுருக்கிக் கொண்டீர்கள்.

    ஜனாதிபதி மைத்திரிபால தமது பதவிக்காலத்தின் பின் மீண்டும் நாட்டைப் பாலனம் செய்யும் நோக்கில் இல்லை. ஆதலால், மீண்டும் ஓர் வெற்றிடம் வரும்.

    அப்போது நீங்கள் மீண்டும் ராஜாவாக வர விரும்பினால், இப்போது நீங்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டு, உங்கள் தவறுகளுக்கான சரியான பிராயச்சித்திரத்தை செயலில் காட்டி சிறுபான்மையினரின் உள்ளங்களை முடிந்தால் வெல்லுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. பொடா பன்னீ என்று கூறவில்லை என்று சந்தோசப்படு

    ReplyDelete

Powered by Blogger.