விருப்பம் இல்லை என்றால், கட்சியைவிட்டு உடனே வெளியேறிப்போகலாம் - ஹக்கீம்
கட்சியின் கட்டுக்கோப்பை மீறுவோர்களும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாதவர்களும் கட்சியிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் உத்தேச புதிய தேர்தல் முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வு கொழும்பு தபாலக தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு சில அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைக்கு மாறாக நடந்து வருவது மிக தெட்டத்தெளிவாக விளங்குகிறது. இவர்களின் செயற்பாடுகள் யாவும் கட்சிக்கும் தலைமைக்கும் எதிரான செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன. அவர்களின் சொந்த சுயநல அரசியலுக்காக கட்சியை மோசப்படுத்த நினைக்க வேண்டாம்.
சிலர் கட்சியைக் குழப்பச் செய்யும் அவர்களின் செயற்பாடுகளை கட்சியும், கட்சியின் தலைமையும் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிப்பதாக நினைத்து கட்சிக்குள் விளையாடவேண்டாம். விருப்பம் இல்லை என்றால் கட்சியை விட்டு உடனே வெளியேறிப்போகலாம் என்றார்.
இந்த உத்தேச புதிய தேர்தல் முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வில் அமைச்சர் மனோ கணேசன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மு.காவின் உச்சபீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
-பைஷல் இஸ்மாயில்-
வியாபாரிக்கும், சுயநலவாதிக்கும் - தலைமைத்துவதத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான். கட்சியின் கட்டுக்கோப்பையும், தலைமைத்துவத்தையும் மதிக்காதவர்களை வெளியேற்றுவதட்கு வக்கில்லாத தலைவர், முதலில் தலைமைத்துவத்திலிருந்த்தும் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். இந்த கட்சி உமது வாப்பா ஊட்டு சொத்தும் இல்லை, இதை வளர்த்தெடுத்த போராளிகளும், ஆதரவளித்த முஸ்லிம்களும் கேனப்பயல்களும் அல்ல.
ReplyDeleteநாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம், சகோதரர் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்துக்கு கொஞ்சம் கூட தகுதி, அற்றவர். இவரை நம்பி இந்த அரசியல் யாப்பு விடயத்தில் இருந்தால் அது நிட்சயம் முஸ்லிம்களுக்கு பெரும் கைசேதத்தையே தரும். எனவே புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் மாற்றத்துக்கு தங்களது பங்களிப்பை செய்வார்களா?
ஏணிகள் இனித் தேவையில்லை.
ReplyDeleteYes. You can go.
ReplyDeleteLeader your correct
ReplyDeleteயெஸ்!! சமூகத்தையும், மக்களையும் விற்று பையை நிரப்புவதே என் வேலை. அமைச்சுப் பதவி தந்தால் போதும். மக்களா ? அது யார்?. இதையெல்லாம் கண்டும் காணாத கள்ளப் பூனைகளாக இருக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து கட்சியை விட்டு வெளியேறவும் !
ReplyDeleteமர்ஹூம் அஷ்ரப் இருந்திருந்தால், இந்த ஹக்கீம் பாராளுமன்றப்படிகளை மிதிப்பதை விட்டும் எப்போதோ தூக்கி எறியப் பட்டிருப்பார்.
ReplyDeleteஎல்லாரும் சேர்ந்து, ஹக்கீமை கடசியில் இருந்து வெளியேற்றப் பாருங்கள்.
அவர் இருப்பதால், முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
தலைவரே உங்களை பார்த்து எங்களுக்கு நிறைய அனுபவம் வந்து விட்டது கொஞ்சம் வழி விடுங்கள் நீங்கள் சுமந்தது போதும்
ReplyDeleteSLMC is not your father property. You should chased first from leadership
ReplyDeleteஎங்கே எனது com.ஒன்னையும் பிரசுரிப்பதில்லை.
ReplyDelete