Header Ads



மைத்திரி வழங்கிய அஞ்சலியை, தேடிச்சென்ற ரணில் - மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிப்பு

நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார். 

கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார். 

குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ளதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments

Powered by Blogger.