நீதியரசர் சலீம், நியமனத்தை ஏற்க மறுப்பு
-விடிவெள்ளி-
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
அதன்படி தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக சட்டத்தரணி கிசாலி பிண்டோ ஜயவர்தன, எஸ்.ஜீ. புன்சிஹேவா, முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் என். செல்வகுமாரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்களில் இருவர் மேற்படி நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள நிலையில் மூவர் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளர்.பொறுப்பேற்க முடியாது என அறிவித்துள்ளனர்.
நீதியரசர் சலீம் மர்சூப் பிஜி தீவுகளுக்கு வருகை தரு நீதிபதியாக கடமையாற்ற செல்லவுள்ளதாலும் என். செல்வகுமாரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுவதாலுமே இப் பொறுப்பை வகிக்க முடியாது என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை மேற்படி இருவருக்குப் பதிலாக புதிதாக இருவர் தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் சட்டத்துறை விரிவுரையாளர் என். செல்வகுமாரன் ஆகியோர் குறித்த நியமனத்தை
Post a Comment