Header Ads



யேமன் மீதான தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக சவூதி அரேபியா உறுதியளிப்பு


ஏமனில் இறுதிச் சடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் காயமடைந்துள்ள ஏமன் நாட்டவருக்கு வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் வெளியேற வழிவகை செய்யப்படும் என செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஹவுதி கட்டுப்பாட்டு பகுதியான தலைநகர் சனாவில் செளதி அரேபியாவால் விதிக்கப்பட்ட வான் கட்டுப்பாடு, காயமடைந்தவர்கள் வெளியேற வசதியாக தளர்த்தப்படும்.

சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட செளதி தாக்குதலில் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

செளதி அரேபியா தனது விமானங்கள்தான் தாக்குதல்களை நடத்தின என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் தாக்குதல் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.

இறுதிச் சடங்கு நடந்த மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சர்வதேச அளவில் வலிமையான கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் முயற்சி. செய்த கொலைகளுக்கு மறுமையில் இவர்கள் பதில் சொல்லத்தானே வேண்டும்.
    சவுதியின் ஆற்சி முஸ்லிம்களின் கையிலா இருக்கின்றது? இவர்களுக்கு வக்காளத்து வாங்கும் ஒரு கூட்டம் அடிப்படை தெரியாத ஒரு கூட்டம் எமது நாட்டிலும் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.