தான் முகாமையாளராக பணியாற்றும் வங்கியில், கொள்ளையிட முயன்றவர் கைது
வென்னப்புவ, தோப்புவ சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்ட குறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் நேற்று -02- மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 18ம் திகதி குறித்த வங்கியில் மேற்கொள்ளப்படவிருந்த கொள்ளை முயற்சியானது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வென்னப்புவ பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளைஅடுத்து இந்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள குறித்த வங்கியின் முகாமையாளர், தன்னுடைய கடனிலிருந்து விடுபடுவதற்கு இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகபொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment