Header Ads



றீட்டாவிடம் ஆவணம் கையளிப்பு


ரீட்டா ஜஷாக் நாடியாவை புத்தளவாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக ஒன்றியம் இருபத்தாறு வருட நிலைபற்றி எடுத்துரைப்பு.

பலவநதமாக வெளியேற்ப்பட்ட முஸ்லீம் சமூகம் சர்பாக இலங்கை வந்துள்ள யூ என் ஓ வின் விஷேட அதிகாரியிடம் எத்திவைப்பு.

சிறுபான்மையினரின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகளையும் ஆராய்ந்து அடுத்த வருடம் மார்ச்சு மாதமளவில் பேரவை மகாநாட்டில் இலஙகையில் சிறுபான்மையினரின் நிலைபற்றி கூறவுள்ளார். எனவே காலத்தின் தேவை கருதியும் எமது சமூகத்தின் உண்மை நிலையையும் கூறவேண்டிய காலமிதுவாகும்.

கொழும்மபு யூ என் ஓ காரியாளயத்தின் கேட்போர் கூடத்தில் இடப்பெற்றது .இதில் புத்தளவாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமமேளனத்தின் தலைவர் அஷ்ஷேக அப்துல் மலிக் .செயலாளர் ஹஸன் பைறூஸ் ஆசிரியர் ஏனைய உறுப்பினர்களான இஞ்சினியர் எம்.அய் .எம்.நஹீப் எம் அய்.ஹலீம்டீன் .எம். நிலாம் ஆகியோர் சென்றிருந்தார்கள்.

இதில் மீள் குடியேற்றத்தின் சவால்களான 

1..காணிப்பிரச்சினை வீட்டுப்பிரச்சினை வாழ்வாதாரப்பிரச்சினை 
2 .நிரவாக ரீதியாக எதிர் நோக்கும் ஓரங்கட்டப்படுதலும் கதவடைப்புகளும் 
3. காணிச்சசுவீகரிப்பு நிகழ்வுகளும் அபகரிப்புக்களும் 
4. காணியில்லாதவர்களுக்கான அரச காணி வழங்குவதில் காலந்தால்தளும் பெய்யான குற்றச்சாட்டுக்களினூடாக உரிமை மறுக்கப்படலும் 
5. மீள் குடியேற்றம் செய்யப்படாமல் எல்லை நிர்ணயம் செய்யப்டுதலும் 
6. வாக்காளர் இடாப்பு பதிவதிலுள்ள இடர்பாடுகள் 
7.மீண்டும் மீண்டும் மீள் குடியேற்றப்பதிவுகள் பதிவுகள் பதியப்படுவது தவிர எல்லாம கணக்கு எடுபடுகிறது தவிர மீள்குடியேறற கொடுப்பனவு கிடைப்பதில்லை 
8 .அரச நிர்வாகத்தினரின் இனவாத மனோபாவநிலையும் இல்லாமலாக்கும் நடைமுறைகளும் 
9.வடமாகாண சபையினூடைய போக்கும் முஸலீம்களின் மீதுள்ள கரிசனையும் 
10. அசையும் அசையா நஷ்டஈடுகள் தொடர்பாக 
11. புதிய அரசியல் யாப்பில் முஸலீம்களின் பாராளு மன்ற இருப்பும் அதன் பாதுகாப்பும் முறையாக பேணுவதில் உள்ள பாதக சூழல் 
12. முஸ்லீம்களின் சரியாச்சட்டம் பேணப்பட வேண்டிய அவசியம் 
13. முஸ்லீம் கலாச்சார சூழல்பேணப்படவேண்டிய அவசியம் 
14.. பௌத்த வாத கடும் போக்கால் ஏற்பட்டுள்ள அச்சுருத்தல்களும் நஷடங்களும் இதுவரை காத்திரமான நஷடஈடுதொடர்பாகவும் 
15. அத்துடன் தொடரந்தும் அகதியாக வாழும் சூழல் நிலவும் நிலை 
16 .மேலும் நாங்கள அகதியாக வாழும் பகுதியனர் எதிர் நோக்கும் சவாலகளும் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.

தங்களின் வருகை பாதிக்கப்பட்ட எமது சமூகம் ஆவலுடன் எதிர் பாரத்ததையும் அது நிகழாமையும் நினைவுபடுத்தப்பட்டது.மேற்படி விடயங்கள் முன்வைக்கப்பட்டன. இன்ஷா அல்லாஹ் எம்மவரது இத்ததூய முயற்சிகளை வல்ல றஹ்மான் பொருந்திக்கொள்வானாக.

No comments

Powered by Blogger.