Header Ads



"இனத்தின் காவல் தெய்வங்களான பௌத்த பிக்குகள், உறக்கத்திலிருந்து விழித்து எழ வேண்டும்"

பௌத்த பிக்குகள் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவரும், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளருமான முரத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டையும், இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க முடியாவிட்டால் வேறு எதனைச் செய்தாலும் பயனில்லை. இன்று நாட்டை சுதேச தேசிய தலைவர்கள் ஆட்சி செய்யவில்லை.மேற்குலக நாடுகளுக்கு அடிமையான இனவாதத்தை போஷிப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பௌத்த சிலைகளை அகற்றவும், விஹாரைகளை அகற்றவும், சிங்கள மக்களை வெளியேற்றவும் கோருகின்றார். வடக்கிற்கு சமஸ்டி ஆட்சி முறைமை அவசியம் என கோரிக்கை விடுக்கின்றார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. நாடு இரண்டாக பிளவடைந்து விடும், பௌத்த மதம் அழிவடைந்து விடும் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இனத்தின் காவல் தெய்வங்களாகவே பௌத்த பிக்குகள் நோக்கப்படுகின்றனர்.

உறக்கத்தில் இருக்கும் பௌத்த பிக்குகள் விழித்து எழ வேண்டும்.உரிமைகளை உறுதி செய்து கொள்ள அணி திரள வேண்டும்.

நாட்டை பாதுகாக்க புதிய சக்தியொன்றை உருவாக்கும் நோக்கில் எதிர்வரும் 8ம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.