பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 92 பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான தகவலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
பொது மக்களின் பங்களிப்பின்றி இலஞ்சம் மற்றும் ஊழலை தன்னால் கட்டுப்படுத்துவது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலற்ற பொது சேவையின் மூலம் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என சட்டதரணி ஜே.சி.வெலிஅமுன இதன் போது தெரிவித்துள்ளார்.
Post a Comment