Header Ads



தனக்கு கிடைத்த சொத்து போதவில்லை எனக்கூறி, 83 வயது முதியவர் மீது மருமகள் தாக்குதல்

மருமகள் தாக்கியதால், மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

கேகாலை கரமுபான பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான நபரே மருமகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த சொத்து போதவில்லை எனக் கூறி அவரது கழுத்தை காலால் மிதித்துள்ளதாக முதியவர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவர் தனது சொத்தை பகிரப்பட்ட விதம் அநீதியானது எனக் கூறி பிள்ளைகளின் மனைவிமார் தொடர்ந்தும் தன்னை திட்டி வருவதாக முதியவர் கூறியுள்ளார்.

அத்தோடு குறித்த முதியவரின் 7 ஆண் பிள்ளைகளில் ஒருவரின் மனைவியே முதியவரை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி இறந்து விட்ட நிலையில் அவர் மகன் ஒருவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும் முதியவர் தாக்கப்படும் போது அவரது பேரப்பிள்ளைகள் அவரை காப்பற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. உலகம் போற போக்கே பாரு தங்கமே திலானே!

    ReplyDelete
  2. ஒன்னுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது......:::.:

    ReplyDelete

Powered by Blogger.