Header Ads



பள்ளிவாசல் நிர்வாக சபையினர் 4 பேருக்கு, காலவரையறையின்றி விளக்கமறியல்

(தமிழ் மிரர்)

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவரை, தென்னை மட்டையால் 100 அடியடித்த குற்றச்சாட்டில், பள்ளிவாசலொன்றின் நிர்வாக சபையைச் சேர்ந்த 4 பேரை, காலவரையறையின்றி விளக்கமறியலில் வைக்க, நீதவான் உத்தரவிட்ட சம்பவமொன்று, புத்தளம் - நல்லன்தெழுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

நல்லன்தெழுவ ஜூம்மாப் பள்ளிவாசலின் நிர்வாக சபையைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டார்.

குறித்த பெண், சில தினங்களுக்கு முன்னர், தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவரால் பலவந்தமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்ணால், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பில், பொலிஸ் விசாரணை நடந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை, பள்ளிவாசலுக்கு அழைத்துள்ள அதன் நிர்வாக  சபையினர், அப்பெண்ணை, 100 முறை தென்னை மட்டையால் தாக்கி, தண்டனை வழங்கியுள்ளனர்.

15 comments:

  1. இஸ்லாமிய ஷரீயா சட்த்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்னுக்கு விபச்சாரம் செய்ததற்கான எந்த வித தண்டனையும் கிடையாது அப்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அல்லாஹ் இடத்தில் உடனடியான மன்னிப்பும் பாதிக்கப்பட்டதற்காக மறுமையில் சொர்க்கமும் உண்டு இது தான் அல் குர்ஆன் இல் அல்லாஹ் காட்டிய நீதியான ஷரீயா சட்டம்

    இந்த அடிப்படையில் பார்த்தால் இதற்காக எமது நாட்டில் உள்ள சட்டம் அல்லாஹ் காட்டிய இஸ்லாமிய ஷரீயா சட்டமே எமது நீதிமன்றங்களிலுும் சட்டத்திலும் உள்ளது

    ஆனால் இந்த தருதல ஜும்மா நிர்வாகம் அந்த பெண்னுக்கு கொடுத்த தண்டனை இஸ்லாமிய ஷரீயா சட்டத்தை தன் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்து கொடுத்து உள்ளது

    ஆகவே இந்த தருதல ஜும்மா நிர்வாகத்தாருக்கு பினை வழங்காமல் கடுமையான தண்டனையை பெற்று கொடுத்து அந்த பாதிக்கப்பட்ட பெண்னுக்கு நஷ்ட ஈடும் வாங்கி கொடுக்க வேண்டும் என்று இலங்கை நீதிமன்றத்தை கேட்டு கொள்கிறோம்

    ReplyDelete
  2. முதலில் என்ன நடந்தது எனும் உண்மை சரிவர அறியப்பட வேண்டும். அதன் பின்னர் குற்றம் புரிந்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் பாரபட்சமாக தண்டித்ததிருந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. These are the morons deserving public beating and humiliation. A rape victim is not guilty of Zina, even in the event of an accusation of a Zina 4 witlessness should testify swearing on Allah, that they have witnessed the actual intercourse taking place. Even if one witness backs out, all other 3 witnesses should get the punishment. These morons just go by some lebbe's interpretation and end up disgracing the Muslims at large.

    ReplyDelete
  4. Muthalil antha nabarai pudyungal.

    ReplyDelete
  5. முழுக்க ஆராய்ந்து செய்தி எழுதுங்கள்.
    வன்புணர்வுக்கெல்லாம் இஸ்லாத்தில் தண்டனையில்லை.
    அந்த நபர் வந்தானா?
    வரவழைக்கப் பட்டானா?
    என ஆராய்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. If the message is true.

    THESE people do practice the religion as per their understanding and some time making favour toward influential people.

    In general none or most of them did not learn the SHAREEA (Islamic Law) from the Quran and Sunnah. They try to practice VILLAGE CUSTOM brought down by their ancestors.

    How come a lady, who is affected by a BULL is again punished by others who claim to be controlling the HOUSE Of Allah.

    This is what happen, when some body or a group trying to apply ISLAM without having a sound knowledge of it.

    Immam Buharee (rah), Said

    "Before you speak and act up, having the Knowledge of that issue is important"

    May Allah Guide us in the path of Salaf us saliheens

    ReplyDelete
  7. தப்லீக்.   ❌
    தவ்ஹீத். ❌
    அலவியா ❌
    நபவியா ❌
    ஷாதுலியா❌
    ஷியா ❌

    இஸ்லாம் ✅....... 1437.......
     

    ReplyDelete
  8. அமைப்புக்கள் இஸ்லாத்தை தாரைவாக்குவதையும் பள்ளி நிர்வாக ங்களை கைப்பற்றுவதையும் பற்றி விழிப்பாக இருக்கவேண்டும் இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான் முந்திரிக்கொட்டமாதிரி நடப்பது உதாரணமாக (இஸ்லாமிய அமைப்புக்கள் மதம் போண்று செயல்படுதல்)

    ReplyDelete
  9. நாட்டின் சட்டத்திற்கு புறம்பான முறையில் தண்டனை வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த நாட்டில் ஷரியா சட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாது.

    ReplyDelete
  10. ஷரியா குற்றவியல் சட்டம் என்று வாசிக்கவும்.

    ReplyDelete
  11. இந்த முஸ்லிம்களுக்கு முதலில் இஸ்லாம் படிப்பிக்க வேண்டும். யாரை யார் தண்டிப்பது. ?

    ReplyDelete
  12. இந்த முஸ்லிம்களுக்கு முதலில் இஸ்லாம் படிப்பிக்க வேண்டும். யாரை யார் தண்டிப்பது. ?

    ReplyDelete
  13. Pls approve what i mentioned is it wrong as you like but ....

    ReplyDelete

Powered by Blogger.