Header Ads



மிஹின் லங்கா அலுவலகத்தில் பதற்றம் - 3 அதிகாரிகள் சிறைப்பிடிப்பு

கொழும்பில் உள்ள மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் நிறுவனத்தின் மூன்று பிரதான அதிகாரிகளை அலுவலகத்திற்கு அடைத்து வைத்துள்ளனர்.

மிஹின் லங்கா அலுவலகத்தின் மனித வள முகாமையாளர், நிதி முகாமையாளர் மற்றும் நிர்வாக முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மிஹின் லங்கா நிறுவனம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

எனினும் தமக்கான வேலை வாய்ப்பு அல்லது உரிய இழப்பீட்ழட வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால், தமது தொழிலை பாதுகாத்து தருமாறும் தம்மை பணியில் இருந்து விலகுவதாயின் உரிய இழப்பீட்டை வழங்குமாறும் கோரி ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

1 comment:

  1. Mahinda rajapaksavidam ketkalaamthaane compensation. Mahindayai nambinaal, naadum mihin Lanka ponru thaarai vaarka vendiyathuthaan

    ReplyDelete

Powered by Blogger.