"மஹிந்த மூழ்கி 2 ஆண்டுகளாகிவிட்டது"
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. அவருடன் பயணிக்க நினைப்பவர்களும் கடலில் மூழ்கவேண்டிய நிலைமையே ஏற்படும். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து குடும்ப ஆட்சியை மீண்டும் கைப்பற்றலாம் என நினைப்பது வெறும் கனவு மட்டுமேயென ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.
கட்சியே இல்லாதவர்கள் ஆட்சியை அமைக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது. மஹிந்த இன்றும் தவறான வழிநடத்தலில் உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மைத்திரி-ரணில் கூட்டணியின் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே பொது எதிரணியின் நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தினபுரி பொது எதிரணியின் கூட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில் பொது எதிரணியினர் விடுத்துள்ள சவால் தொடர்பில் வினவியபோதே துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனி கரை சேர ஒருபோதும் முடியாது.
ReplyDelete