Header Ads



மொத்தமாய் முழு முஸ்லிமும் வெளியேறு - ஈசலாய் சிதறடிக்கப்பட்டு அகவை 26


அகவை இருபத்தாறு
அல்லல் வரலாறு
அகதி விடிவேது
ஏங்கும் காலமிது
தொண்ணூறு இலங்கை
முஸ்லிம்களுக்கு வல்லூறு
மொத்தமாய் முழு
முஸ்லிமும் வெளியேறு
புலிகளின் வாய்ப்பாடு
வடக்கான் வந்தான்
கிழக்கான் இருந்தான்
வடக்கான் இழந்தான்
கிழக்கான் பாதுகாத்தான்
அகவை இருபத்தாறு
பணக்காரன் ஏழையாகி
சொந்தங்கள் அநாதையாகி
சுகதேகி நோயாளியாகி
நாகரீகமானவன் நாடோடியாகி
அகவை இருபத்தாறு
பள்ளிகள் பாழடைந்து
பாடசாலைகள் படியிழந்து
பிள்ளைகள் படிப்பிழந்து
விவசாயி வயலிழந்து
வியாபாரி கடையிழந்து
தொழிலாளி தொழிழந்து
அகவை இருபத்தாறு
புத்தளத்தில்,
அநுராதபுரத்தில்,
குருணாகலயில்
கொழும்பில்,
நீர்கொழும்பில்,
பாணந்துறையில்,
பள்ளிமுல்லையில்,
ஈசலாய் சிதறடிக்கப்பட்டு!!
அகவை இருபத்தாறு
மாளிகைகள்,
கல்வீடுகள்,
மண்வீடுகள் குடிசைகளாகி
ஊர்கள் சேரிகளாகி!!!
அகவை இருபத்தாறு
காலைப்பள்ளி மாலையிலாகி
வடமாகாண கோட்டா
வடமேலுக்காகி
பட்டக் கல்வி
தொழில்வாய்ப்பு
கேள்விக்குள்ளாகி !!!
அகவை இருபத்தாறு
வடமாகாண முஸ்லிம்கள்
மற்ற மாகாண முஸ்லிம்களுடன்
ஒன்றறக் கலந்து
நல்லவர்கள் கெட்டவர்களா(க்)கி
கெட்டவர்கள் நல்லவர்களா(க்)கி !!!
அகவை இருபத்தாறு
அகதி வாழ்வுக்கு
அகவை இருபத்தாறு
அல்லல் வாழ்வுக்கு
இன்றுடன்
அகவை இருபத்தாறு!!!

அஷ் ஷைக் ஸமூன் றமழான் ஸலபீ

No comments

Powered by Blogger.