Header Ads



13 வயது சிறுமியையும் விட்டுவைக்காத டிரம்ப் - நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வரும் டொனால்ட் டிரம்ப் மீது 13 வயது சிறுமியை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்ப் மீது பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது.

தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் இப்புகார்களால் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு 13 வயதான சிறுமி ஒருவரை டொனால்ட் ட்ரம்ப் பலவந்தமாக கற்பழித்ததாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், டொனால்ட் டிரம்பின் நிதி ஆலோசகரான Jeffrey Epstein என்பவரும் அந்த சிறுமியை கற்பழித்ததாக அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்புகார்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரபட்டுள்ளது என டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து புகார்கள் குவியும் நிலையில், 13 வயது சிறுமியை கற்பழித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதிகள் டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

2 comments:

  1. Trump practices celibacy. Rape out of question. Masturbation possible.

    ReplyDelete
  2. The people who practice celibacy are the most vulnerable and criminals in day to day lives.

    ReplyDelete

Powered by Blogger.