125 இலங்கையர்களை கைதுசெய்ய, இன்டர்போல் பொலிஸார் சிவப்பு அறிவித்தல்
கொலை, பயங்கரவாத நடவடிக்கை, பாரிய மோசடிகள் தொடர்பாக 125 இலங்கையர்களைக் கைது செய்ய சர்வதேச இன்டர்போல் பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். இன்டர்போல் பொலிஸாரின் புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 பேரில் 118 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ள 125 பேரில் ஏழுபேர் பெண்களாவர். மேலும் போதை வஸ்து வர்த்தகம், கடத்தல் தொடர்பாக 10 பேரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
Post a Comment