Header Ads



"தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்" - ரஞ்சித் அலு­வி­கார Mp கவலை

-ARA.Fareel-

தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது.

இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை  பள்­ளி­வா­ச­லுக்கு  மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை  மாவட்ட பாராளு­மன்ற  உறுப்­பினர்  ரஞ்சித்  அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  முறை­யிட்­டுள்ளார். 

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  பல­வ­ரு­டங்கள்  கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல் நிர்­வாகம்  பள்­ளி­வா­சலை  அவ்­வி­டத்­தி­லி­ருந்து  அகற்றிக் கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு உகந்த வச­தி­யான  காணி­யொன்­றினை அவர்கள் கோரி­னார்கள். அதற்­கி­ணங்க அண்­மையில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்­ளையில் காணி­யொன்­றினை இனம் கண்­டுள்­ளது. 

என்­றாலும் நகர அபி­வி­ருத்­திச்­சபை அதி­கா­ரிகள் தமது கட­மையில் அச­மந்தப் போக்­கி­னையே  கடைப்­பி­டிக்­கி­றார்கள். பள்­ளி­வா­ச­லுக்கு  அரு­கா­மையில்  வாழும் குடும்­பங்கள் இடம்­பெ­யர்­வ­தற்­கான காணி இனம் காணப்­ப­ட­வில்லை. அப்­ப­கு­திக்கு பாதை மற்றும் குடிநீர் போன்ற உட்­கட்­ட­மைப்பு  வச­திகள்  அமைக்­கப்­ப­ட­வில்லை. 

அத்­தோடு தம்­புள்ளை  புனித  பூமி­யி­லி­ருந்து  அகற்­றப்­பட்ட கோவி­லுக்­கான காணியும்  இது­வரை இனம் காணப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலை தொடர்ந்தும் நீடித்தால்  தம்­புள்ளை பள்­ளியை அகற்­று­வ­தற்கு  முன்­புபோல் சவால்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம்.  இதனால்  அங்கு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு பாதிக்­கப்­படும். 

தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­மகா விகா­ர­hதி­பதி  இனா­ம­லுவே தேரர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு பல முயற்­சி­களை மேற்­கொண்டார்.

 ஒரு தடவை  பாரா­ளு­மன்­றத்­துக்கும்  வந்து எம்­முடன் கலந்­து­ரை­யா­டினார். இவ்­வாறு  அனை­வரும்  தம்­புள்ளை பள்­ளி­வாசல்  விவ­கா­ரத்தில் ஒரே கருத்­தினைக் கொண்­டி­ருக்­கையில் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தனது  கட­மையை  பிற்­போட்டு வரு­கி­றது என்றார். 

பள்­ளி­வாசல்  நிர்­வா­க­சபை  உறுப்­பினர்  எஸ்.வை.எம். சலீம்­தீனைத்  தொடர்பு கொண்டு  வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை  தம்­புள்­ளையில்  தற்­போது  பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் இடத்­தி­லி­ருந்து  சிறிது தூரத்தில்  பள்­ளி­வா­ச­லுக்­கென்று காணி­யொன்­றினை  இனம் கண்­டுள்­ளது.

பள்­ளி­வாசல்  நிர்­வா­கி­க­ளுக்கும்  காணி காண்­பிக்­கப்­பட்­டது. காணி மது­பா­ன­சா­லைக்­க­ருகில்  அமைந்­துள்­ளதால்  வேறு காணி  வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தோம்.

பல மாத கால­மா­கியும் நகர  அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை எவ்­வித மாற்று ஏற்­பா­டு­களும் செய்­ய­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு  மாற்றுக்  காணிகளுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையின்  நடவடிக்கைகள் மந்த கதியிலே  நடைபெறுகின்றன. 

இது தொடர்பாக  அமைச்சர்களான கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரை நேரில் சந்தித்து பள்ளிவாசல் நிர்வாக சபை கலந்துரையாடவுள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.