Header Ads



முஸ்லிம்களின் வீடுகளில் CCTV கமராவின் அவசியம் - ஸதக்கா + ஸகாத் மூலமும் உதவலாம்..!!

-Mohamed Jawzan-

சகோதரரிகளே சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு 

என் அன்பு உள்ளங்களே அன்மையில் நமது சகோதரிகள் தாய்மார்கள் தனியாக இருக்கும் வீடுகளைை குறிவைத்து சமூக விரோதிகளான கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் அவர்களின் குற்றச்செயல்களை செய்து விட்டு தப்பி செல்லும் செய்திகளை நாம் அறிந்து உள்ளோம்

அன்மையில் இலங்கை கிழக்கு மாகாண பகுதியில் உள்ள ஏறாவூர் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட இரட்டை கொலை இதற்கு தகுந்த உதாரணமாகும்

மேலும் குற்றாவாளிகள் cctv camera பொருத்தப்பட்ட வீடுகளில் தங்கள் குற்றச்செயலை செய்ய பயந்து அந்த பகுதி எல்லைக்கே வர அச்சம் அடைந்து cctv camera இல்லாத வீடுகளை மட்டும் குறிவைத்து அவர்களின் கொடூர குற்றங்களை கோழைத்தனமாக செய்வதையும் நாம் தற்போது நன்றாக அறிந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

ஆகவே இனி வரும் காலங்களில் எமது வீட்டு வாசல்கள் மற்றும் எமது வீட்டு சுற்றுப்புறங்களை கண்கானிக்க கூடிய cctv camera களை பொருத்துவதானது குற்றவாளிகளை அச்சமடைய செய்து இவர்களால் எமது வீடுகளில் நடக்க இருக்கும் பாரிய விபரீதங்களை தடுக்க cctv camera களை பெருத்தி எமது குடும்பங்களின் அன்பு உறவுகளையும் எமது சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகம் கிடையாது

மேலும் வெளிநாட்டுகளில் தொழில் செய்யும் எமது உறவுகள் TV மற்றும் Radio போன்றவைகளை மட்டும் வாங்கி வராமல் எமது குடும்ப உறவுகளை மற்றும் சொத்துக்களைை சமூக விரோத கயவர்களிடம் இருந்து பாதுகாக்க மேற்கண்ட இலத்திரணியல் உபகரணங்களுடன் சேர்த்து cctv camera களையும் வாங்கி வந்து எமது வீடுகளில் பொருத்துவது மிகவும் அவசியமாான பாதுகாப்பு ஆகும்

மற்றும் cctv camera வசதிகளை வாங்க முடியாத ஏழைகளுக்கு நாம் செய்யும் ஸதக்கா மற்றும் ஸகாத் தொகைகள் மூலம் அவர்களுக்கு cctv camera களை பொருத்தி கொடுத்து அவர்களை பாதுகாக்கும் நன்மைகளை அல்லாஹ்விடம் இருந்து நாம் பெற்று கொள்ள முடியும் இதை நிச்சயமாக நாம் செய்ய வேண்டும்

மேலும் இதை அனைவரும் வாங்கி பொருத்துவதன் மூலம் எமது குடும்பங்களை நாம் எந்த தேசத்தின் மூலையில் இருந்தாலும் எமது தற்போதைய நமது கைகளில் இருக்கும் Phone கள் மூலமே இதன் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு நேரடியாக கண்கானிக்க முடியும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

மற்றும் சமூக விரோதிகளான கயவர்களிடம் இருந்து எமது அன்பு சகோதரிகள் மற்றும் தாய்மார்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்

மேலும் cctv camera க்கள் உங்கள் பொருளாதார வசதிக்கேற்ற விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது

நண்பர்களே மேலும் பாதுகாப்பு அற்ற சூழலில் வசிக்கும் எமது உறவுகள் இதை அறிந்து கொள்ள இந்த பதிவை அதிகம் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்

5 comments:

  1. good advertising for CCTV camera.
    maatru udaikum oru velai unavukkum irukka veettirkum valiyillaadha ealai eliyavargalukku cctv rombavum mukkiyamtaan...
    sadaka enra peyaril thani oruvarin suya viyaabara ilaabatthirku eludhiya indha aakkam keeltharamaanadhu...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Arab spider .. இதை எழுதியவர் cctv camera வியாபாரி கிடையாது சமூக பாதுகாப்பின் மீது அக்கரை கொண்டு எழுதிய இந்த ஆக்கத்தை இப்படி உங்களை போல் கீழ்த்தரமானவர்கள் கொச்சை படுத்துவதானது உங்களின் சமூக விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்பதை மனதில் வைத்து கொள்ளவும்

    இந்த பாதுகாப்பு தொழில்நுட்பமானது சமூக விரோதிக்களுக்கு மிகவும் சவாலான ஒன்று என்பது இதில் உறுதி

    ReplyDelete
    Replies
    1. keeltharamaanavargaltaan... keeltharamaana aakkatthirku thunai poovaargal...
      pangil paadhi tharuvadhaaga chonnaara.?

      Delete
  3. Arab spider . . இது மக்களின் பாதுகாப்புக்கான பதிவு இந்த பதிவு உனது சமூக விரோத செயலுக்கு தடையாக உள்ளது என்பது உனது இதன் எதிர் வாதத்தில் தெளிவாக உள்ளது

    சமூக விரோதியே கேட்டுக்கோோ இனி வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் உங்களை தப்ப விடாது என்பதை மனதில் வைத்து கொள்ளவும்

    ReplyDelete

Powered by Blogger.