Header Ads



சீனங்கோட்டை ஜும்மா பள்ளிவாசலில், மாற்று மதத்தினரின் கல்விச் சுற்றுலா


சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் மேம்படுத்தும் நோக்கில் கௌரவ ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் பணிப்பின்பேரில் நல்லிணக்க கல்விச்சுற்றுலா பிலியந்தலை கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இக்கல்விச் சுற்றுலாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு விகாரை, கோவில், தேவாலயம், பள்ளிவாசல் போன்ற வணக்கஸ்தலங்களுக்கு  விஜயம் மேற்கொண்டனர்.

பிலியந்தலை கல்விப்பணிமனையின் தமிழ் பிரிவு கல்வி பணிப்பாளர் I.L.M காதர் , தெஹிவளை மீலாத் முஸ்லிம் கல்லுரியின் அதிபர் M.S.M. சுஹார், மொரட்டுவ அரபாத் பாடசாலை ஆசிரியர் M. மஸ்ஹூர், மீலாத் முஸ்லிம் கல்லுரியின் ஆசிரியர் அஷ்ஷேய்க். S.L.M. இம்தியாஸ் (நளீமி) போன்றோரின் வழிகாட்டலின் அடிப்படையில், கலந்து கொண்ட அனைவரும் பேருவலை சீனங்கோட்டை ஜும்மா பள்ளி வாசலை தரிசித்த அதேவேளை அங்கு இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களும், அதன்  சிறப்பம்சங்களும் முன் வைக்கப்பட்டமை பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் புரையோடிப் போயிருந்த தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயம் மேலோங்க காரணமாக அமைந்தது.




1 comment:

  1. These are mere stage shows, leading to nowhere. Why not plan something meaningful and fruitful and achievable.

    ReplyDelete

Powered by Blogger.