Header Ads



மைத்திரிக்கு முதுகெலும்பில் பலம் இல்லாததால், விக்னேஸ்வரன் ஆடுகிறார்

நாட்டின் தலைவருக்கு முதுகெலும்பில் பலம் இல்லாத காரணத்தினாலேயே வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆடுவதாக மகரகம நகர சபையின் முன்னாள் தலைவர் காந்தி கொடிக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறி வரும் நிலையில், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாதது பிரச்சினைக்குரியது.

முதுகெலும்புள்ள தலைவர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே விக்னேஸ்வரன் போன்றவர்கள் இப்படி ஆடுகின்றனர்.

முதுகெலும்புள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக தாம் தொடர்ந்தும் போராடப் போவதாகவும் காந்தி கொடிக்கார குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. இது என்னவோ ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை தான் மஹிந்த இருக்கும்வரை வாலை சுருட்டிக்கொண்டு இருந்தவன் இன்று மஹிந்த திட்டத்தை சரியாக நடத்திக்கொண்டு போகும்போது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது கேவலம். தமிழ் தீவிரவாதம் நாட்டிற்கு கேடு

    ReplyDelete
  2. If a community ask their right
    Is it a crime ???

    ReplyDelete
  3. இதன் பின்பலம் புரியலயா சகோ. Ir MS

    ReplyDelete
    Replies
    1. விக்கியின் எழுக தமிழ் திரை மறைவிற்கு பின்னால் மஹிந்தவின் சகாவும் விக்கியின் சகலையுமான வாசுதேவ நாணயக்கார போன்றோரின் பின் புலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அதிகார அரசியல் நாடகம். தமிழனுக்கு தீர்வு என்று ஒரு நிலை வரும்போது தமிழனே தமிழனை காட்டிக்கொடுத்தது தானே வரலாறு, அன்று கருணா இன்று விக்கி.

      Delete
  4. MAFIYA WORLD. Mahinda trying to to brake the vote for govt

    ReplyDelete

Powered by Blogger.