தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நீதியரசர் சலீம் மர்சூப்
தகவல் அறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
அதன்படி தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மன்பில நியிமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக சட்டத்தரணி கிசாலி பிண்டோ ஜயவர்தன, எஸ்.ஜீ. புன்சிஹேவா, முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் தியாகநாதன் செல்வகுமாரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மாலை ஜனாதிபதியிடம் இருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Post a Comment