Header Ads



மிஸ்ட் கோல், ஏற்படுத்திய விளைவு..!

குருணாகல் கல்கமுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் 20 வயதான யுவதியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசிக்கு வந்த மிஸ்ட் கோல் மூலம் யுவதிக்கு இந்த இளைஞன் அறிமுகமாகியுள்ளார். நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இருவரும் நேரில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், இருவரும் கல்கமுவ நகரில் சந்திப்பது என முடிவு செய்தனர்.

அனுராதபுரத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படும் இந்த இளைஞன், தனக்கு தெரிந்த வீடு ஒன்று இருப்பதாகவும் அங்கு எவரும் இல்லை என்பதால், சுதந்திரமாக பேசிக்கொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு இணங்கிய 20 வயதான யுவதி, இளைஞனுடன் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் வைத்து யுவதியை இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இளைஞன் யுவதியை தாக்கியுள்ளதுடன் யுவதி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் சென்று யுவதியை காப்பாற்றியுள்ளனர். சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை மிகவும் நம்பியதாகவும் அந்த நம்பிக்கையில் அவரை சந்திக்க வந்ததாகவும் அவர் தனக்கு இப்படி செய்வார் என என்றும் நினைத்தில்லை எனவும் யுவதி காப்பாற்றிய இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

யுவதி கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

அதேவேளை தப்பியோடிய இளைஞன் ஏற்கனவே திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே இந்த நபர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.