Header Ads



கோவையில முஸ்லிம்களுக்கு எதிரக இந்து முன்னணி வெறியாட்டம் - நெஞ்சை உலுக்கும் காட்சிகள்

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் : கதறி அழும் முஸ்லிம் பெண்கள் - கோவை வன்முறை வெறியாட்டம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வாசுகி உமாநாத் நேரில் ஆய்வு.....!!

கோவையில் பாஜக, இந்து முன்னணியை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டு வீசினர்.

200 க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கினர். 60 க்கும் மேற்பட்ட பேருந்துகளை அடித்து நொறுக்கினர். 20 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், கார்கள், லாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறை அதிகாரிகளை தாக்கி, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தினர்.
2 கடைகளுக்கு தீ வைத்தனர்.

பாஜக, இந்து முன்னணியை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் கோவை மாநகரையே வன்முறை களமாக மாற்றினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி உமாநாத் அவர்கள் கோவையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் கூறியுள்ள செய்தியில்...

சமூக வலைதளத்தில் வந்த செல்போன் கடைக்கு சென்றோம். கடையின் உரிமையாளர் இஸ்லாமியர். ரூ 60 லட்சம் இழந்துள்ளதாக வேதனையோடு கூறினார்.

அருகிலுள்ள மகாலட்சுமி பேக்கரிக்கு சென்றோம். கடையில் இருந்து பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு இரண்டு கோஷ்டிகள் தனி தனியாக ரூ 2 ஆயிரம் கேட்டனர். நாங்கள் ரூ 500 மட்டுமே கொடுத்தோம். அதன்காரணமாக எங்கள் கடையை அடித்து நொறுக்கியுள்ளதாக வாய் விட்டு அழுதார்.

கோவை துடியலூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அச்சத்தில் நடுங்கியவர்களை காக்க அங்கிருந்த மாதர் சங்க உறுப்பினர்களும், வாலிபர் சங்க உறுப்பினர்களும் திரண்டு பகுதியின் நுழைவு வாயில் நின்று விட்டனர்.

வன்முறை வெறியாட்டத்தில் அழிக்கப்பட்ட சேதாரங்களை துல்லியமாக ஆய்வு செய்து அரசு இழப்பீடு தரவேண்டும் என்று கூறினார்.


5 comments:

  1. Identify the arsonist and take one by one for a task

    ReplyDelete
  2. வெள்ளத்தில் செய்த உதவிக்கு பிரதியுபகாரம் போல

    ReplyDelete
  3. Where is our Anthonyraj and nilavan and some other guys r there no

    ReplyDelete
  4. Abdullah ahamed
    இது முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவே தப்பி தவறி ஹிந்து ோதரர்களுக்கு எதிராக நடந்திருந்தால் மடிச்சுகட்டி ொண்டு வந்திருப்பார்கள் முதல் காமன்ட் அவங்கடதான் மனதில் அப்படி ஒரு துவேசம்

    ReplyDelete
  5. இதை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீல் ஐஎஸ் அல் கய்தா என்று சொல்லி அத்தனைமுஸ்லிம்கலையும் கைது பன்னியிருப்பார்கல்

    ReplyDelete

Powered by Blogger.