Header Ads



காத்தான்குடி கடற்கரையில், வாகனம் ஒன்றிலிருந்து ஜனாஸா மீட்பு

-Tn-

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரையில் இன்று (26) காலை சிறிய வாகனம் ஒன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிசாருக்கு கடைத்த தகவலொன்றை அடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையில் பட்டா எனப்படும் சிறிய வாகனமொன்றிலிருந்து சடலமான்றை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காத்தான்குடிக்கு மரக்கறி ஏற்றி வந்த குறித்த வாகனத்திலேயே அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த எம்.எம். பாறூக் (62) என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.