Header Ads



பாகிஸ்தான் தலிபான் தளபதி பலி

ஆப்கான் பாதுகாப்பு படையினரால் ஒரு முக்கிய பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தளபதி கொல்லப்பட்டதாக, கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பாக்டிகா மாகாணத்தில், ஆஸாம் தாரிக் என்ற முக்கிய தலிபான் தளபதி இறந்துள்ளார். பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் முன்னாள் பேச்சாளராக இருந்த தாரிக், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குழுவிலிருந்து பிரிந்த சென்ற பிரிவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார்.

ஆப்கான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தங்களின் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.