Header Ads



ஹஜ் பெருநாள் தினத்தில், அமெரிக்காவில் பள்ளிவாசலுக்கு தீ வைப்பு


முஸ்லிம்களின் ஹஜ்ஜிப் பெருநாள் தினத்தில் அமெரிக்காவின் பிளோரிடா மாநில பள்ளிவாசல் ஒன்று தீமூட்டப்பட்டுள்ளது. இது ஒரு வெறுப்பு தாக்குதலாக இருக்கும் சாத்தியத்தை பொலிஸார் நிராகரிக்கவில்லை.

கடந்த திங்கள் அதிகாலையில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால் போர்ட் பியர்ஸில் இருக்கும் இந்த இஸ்லாமிய மையத்தை யாரோ நெருங்கி வருவதை கண்காணிப்பு கெமரா பதிவு காட்டுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சேத விபரம் பற்றி உடன் தகவல்கள் வெளியாகவில்லை. செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 15 ஆண்டு பூர்த்தி தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையிலேயே இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒர்லாண்டோ இரவு விடுதியில் கடந்த ஜுன் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தி 49 பேரை கொலைசெய்த ஒமர் மடீன் இந்த பள்ளிவாசலுக்கு வருபவராக இருந்துள்ளார். இதனால் கடந்த காலங்களிலும் இந்த பள்ளிசால் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

1 comment:

  1. Last year crane crash happened in Makkah on 11th september.So it could be the well planned coup to revenge for the world trade center attack.

    ReplyDelete

Powered by Blogger.