தூக்குத் தண்டனை கைதி, துமிந்தவை வைத்தியசாலையில் அனுமதிக்க திட்டமா..?
-Tw-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவித்து வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துமிந்தவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறை ஒன்றில் அனுமதிப்பதற்கு தற்போது வரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவரது தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக காயங்களுக்கு தற்போது வரையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன் ஊடாக அவருக்கு கிருமிகள் நுழைவதாக கூறி அவரை கட்டணம் செலுத்தும் அறையில் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய வைத்திய அறிக்கை சமர்ப்பித்து, துமிந்த சில்வாவின் சுகாதார நிலைமைக்கு வெலிக்கடை சிறைச்சாலை பொருத்தமற்றதென கூறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment