Header Ads



துமிந்த சில்வா தொடர்பில், மைத்திரி எடுத்த தீர்மானம் சரியானதே..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வேட்பு மனு வழங்கப்படாமை நியாயமானதே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது துமிந்த சில்வாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பு மனு வழங்கவில்லை.

துமிந்தவிற்கு வேட்பு மனு வழங்கக் கூடாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தமை நியாயமானதே என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் நியாயமானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது என்பது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.