Header Ads



குவைத்தில் கசிப்பு காய்ச்சிய, இலங்கையர் பிடிபட்டார்

குவைத் நாட்டில் தனது தங்குமிடத்தில் கள்ளச்சாரயம் (கசிப்பு) காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளி சல்மியா என்ற பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வசித்து வந்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வசிப்பிடத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த தீ தொடர்மாடியில் பரவியதை அடுத்து, அவர் கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.