Header Ads



ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளை, குறிவைக்கும் மஹிந்த தரப்பு

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர்மட்டத் தளபதிகளை தமது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கு, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்தவாரம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை கூட்டு எதிரணியின் தலைவர்கள் சந்தித்த போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும், நெருக்கமாகவும் இருந்து ஓய்வு பெற்ற பிரபலமான இராணுவத் தளபதிகளை இணைத்துக் கொள்வதன் மூலம், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.