Header Ads



ஞானசாரருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, திருத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அவ­ம­திக்கும் வகையில் நடந்து கொண்­ட­தாக ஹேமா­கம நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்றப் பத்­தி­ரி­கையை திருத்­தங்­க­ளுடன் எதிர்­வரும் 13 ஆம் திகதி சமர்ப்­பிக்­கும்­படி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் சட்­டமா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஊட­க­வி­யலாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டயின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ உளவுப் பிரிவு அதி­கா­ரி­களை ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய தினத்­தன்று ஞான­சார தேரர் நீதி­மன்ற வளா­கத்­தினுள் கல­கத்தை உரு­வாக்கும் நோக்கில் செயற்­பட்­ட­தா­கவும் இதனை நீதி­மன்­றத்தை அவ­ம­திப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளாரா? என்­பது தொடர்பில் ஆரா­யு­மாறு ஹோமா­கம நீதிவான் ரங்க திசா­நா­யக்க கோரி­யி­ருந்தார்.

ஹோமா­கம நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியின் இந்தக் கோரிக்கை நேற்று முன்­தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

விசா­ர­ணை­யின்­போது ஞான­சார தேரரின் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா ஞான­சார தேரர் அன்­றைய தினம் எந்த வகையில் ஹோமா­கம நீதி­மன்­றினை அவ­ம­தித்தார் என்­ப­து­பற்றி சட்­டமா அதிபர் தனது குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டிலை என்றார்.

இந்­நி­லையில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தலைவர் தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை முன்­வைத்து வழக்­கினை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முயற்­சிப்­ப­தாகத் தெரி­கி­றது என்று குறிப்­பிட்டார்.

ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்ற வளாகத்தினுள் நீதிமன்றினை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.