Header Ads



வீட்டிலிருந்து உணவு வேண்டுமென அடம்பிடித்த, துமிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின்குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலைதிணைக்கள அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தனக்கு சிறைச்சாலையில் வழங்கும் உணவினை உண்ண முடியாது என்றும், தனக்குவீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை உண்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரியிருந்தார்.

எனினும் இவரது கோரிக்கையை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.

எந்தவொரு மரணதண்டனைக் கைதிக்கும் வீட்டு உணவினை உண்பதற்கு அனுமதியில்லைஎன்றும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.