Header Ads



ஹஜ் ஏற்பாடுகள் தயார் - சவூதியிடமிருந்து வெளிப்பட்டுள்ள எச்சரிக்கை


ஹிஜ்ரி 1437 ஆம் அண்டிர்கான ஹஜ் இறையருளால் இனிதே நிறைவு பெறுவதற்கு உரிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளம் திருப்தியான முறையில் செய்ய பட்டிருக்கிறது என கூறிய மக்கா ஆளுனர்,

புனித பயணிகளின் பாதுகாப்பும் அவர்கள் தம் கடமையை குறைவின்றி நிறைவாக செய்வதற்கு உரிய பாது காப்பை உருவாக்குவதும் சவுதி அரசின் மிக முக்கிய பொறுப்பாகும்

இந்த பொறுப்பினை உணர்ந்தள்ள நாம் அதை எம்மால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறோம்

ஈரானின் நாச கர சக்திகள் யூதகைகூலிகளான I.S.I.S அமைப்பினர் ஆகியோர் சதி வேலைகளில் இறங்கலாம் என்ற தகவிலின் பின்ணியிலேயே மக்கா ஆளுனர் மேற்கூறபட்ட தகவலை தெரிவித்தார்

இறைவனின் விருந்தாளிகள் மீது மென்மையான நடைமுறைகளை மேற்கொள்ளும் அது வேளையில் அமைதி இன்மையை உருவாக்க முயலகுடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க தயங்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்

புனித தலங்களின் அனைத்து பகுதிகளும் உயர்தர கண்காணிப்பில் கொண்டு வரபட்டிருப்பதாகவும் இதற்கென்று பல நிலைகளில் பல்லாயிர கணக்கானோ உழைத்து கொண்டிருபதாகவும் அவர் தெரிவித்தார்

அது போல் சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

ஹாஜிகளுக்கு உதவிகள் செய்வோம் அவர்களை அறவணைப்போம் என்றும் அவர்களுக்கு தீங்கு செய்பவாகள் மிக பெரிய குழப்பவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.