Header Ads



இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் - புலி குண்டர்களின் மீது பாயவிருக்கும் மலேசியா


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பிவைக்கச் சென்று திரும்பியபோதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வழியனுப்பிவைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷ விகாரைக்குச் செல்லப்போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Òநாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்றுவிட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்தபோதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்Ó என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.

எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனைபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை. எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை தேடிவருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Òதூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம்Ó என்றும் தெரிவித்தார்.

Òஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு மென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.

இதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

4 comments:

  1. புலி தீவிரவாதம் என்பது மலைசியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். இதை உணராமல் உயஸ்தானிகரை தமிழ் தீவிரவாத காடைய கூட்டம் தாக்கும் போது வேடிக்கை பார்த்த அந்த பொலிஸாரின் பதவிகளும் பறிக்கப்பட வேண்டும். இதில் மலேஷிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை பஞ்சம் பிழைக்க போன தமிழ் நாடோடிகளுக்கு மிக பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. இவர்கலை எந்த நாடு என்று அறிந்து அந்தந்த நாட்டுக்கு நாடுகடத்தவேனூம் அப்பதான் அந்தந்த நாட்டின் தண்டனையில் இருந்து தப்பமாட்டார்கள் இவர்கலை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் தேறியும் டப்பா கிளியிரது,

    ReplyDelete
  3. இவர்கள் சந்தேகம் இல்லாத புலிகள்தான்.மஹிந்தைக்கும் நாட்டுக்கும்,அரசுக்குமிடையில் பிரச்சினை இருக்கலாம் அது உல் நாட்டு பிரச்சினை நாடு என்று வரும்போது எவ்வகையிலும் அந்நிய நாட்டில் எந்த குடி மகனும் தாக்கப்படக்கூடாது.இன்று மஹிந்தைக்கு நாளை வேறு ஒருவருக்கு வரலாம் ஆகவே இவ்வாறான காடையர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகிந்த வந்திருந்தால் அன்சாரிக்கு அடிக்காமல் அவர்களின் கொலை வெறியை மகிந்த மீது காட்டி சில வேலை கொலையும் செய்திருக்கலாம்.மலேசிய அரசாங்கம் இலங்கை அரசும் மக்களும் மனம் திருப்திப்படும் வகையான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. Srilanka Government should Recall High commissioner n all staff until inquiries done

    ReplyDelete

Powered by Blogger.